Thursday, May 16, 2019

சமண -பௌத்தம் தமிழகத்தில் அழிந்தது எப்படி... பதில் : கழுவேற்றம்

prakash jp : ..... சுமார் ஆறு அடி உயரமுள்ள கூர்மையான கைத்தடிமன்
அளவுள்ள உலோககம்பி செங்குத்தாக நிறுத்திவைக்கப் பட்டிருக்கும்... சமண துறவிகளை நிர்வாணமாக்கி அதன் கூர்மையான முனையின் மீது அவர்களது ஆசனவாயை சொருகி உட்கார வைத்துவிடுவார்கள்...
கொஞ்சம் கொஞ்சமாக அந்த கம்பி அவர்களது ஆசனவாயின் வழியாக தலையை அடையும் வரை பலமணி நேரத்திற்க்கு அவரகள் உயிருடன் துடித்துக் கொண்டிருப்பார்கள்...//
By ஹரி ஹரன் in FB
சமணர் கழுவேற்றம் குறித்தான விவாதம் என்பது பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பது. இத்தகைய விவாதங்கள் நம்மை நமது வரலாற்றுடன் பொருத்தி பார்ப்பதற்கானது அல்ல, நாம் அந்த வரலாற்றில் இருந்து பாடம் படித்துக் கொள்ளவே.
சமணர் படுகொலை என்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை என்று கூறி பலர் மறுத்து வருகின்றனர். இவர்களுக்கு எத்தனை சான்றுகள் கொடுத்தாலும் இல்லை என்று தான் திரும்ப திரும்ப கூறுவார்கள். அதற்கு காரணம் தங்களை மேல்நிலையில் வைத்துக் கொண்டு நாங்கள் சமணர்களை கழுவிலேற்றும் அளவிற்கு
கொடுமையானவர்கள் இல்லை என்று தங்களின் இந்து பரம்பரையை தூக்கிப்பிடிப்பது இல்லாமல் வேறு எதுவும் இல்லை. எந்த ஒரு சமூகம் தான் செய்த தவறுகளை உணர்ந்து அதிலிருந்து திருத்திக் கொள்ளமல் தன்னை போலி அடையாளங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறதோ அந்த சமூகம் என்றும் பண்பட்டதாக மாறும் வாய்ப்பு இல்லை. வேண்டுமென்றால் ஹிடலர் ஆரிய இனத்தை வலுவுள்ளதாக ஆக்குகிறேன் என்று சொல்லி, அவர் காலத்தில் தன் இனத்தில் இருந்த ஊனமுற்றவர்கள், வலிமையில்லாதவர்கள் அனைவரையும் கொன்று குவித்த பாசிச மனப்பான்மையை தங்களுடையதாக மாற்றிக் கொள்ள மட்டுமே இவர்களால் முடியும்.